பன்னாட்டு கூட்டுறவு தினம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோசலிசவாதியான சார்லஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஓவன், டாக்டர் வில்லியம் கிங் ஆகியோரின் சிந்தனையில் உதித்த தத்துவமே, ‘கூட்டுறவு’. இது 1844-ல் ரொக்டேல் நகர தொழிலாளர் களால் செயல்வடிவம் பெற்றது.
பன்னாட்டு கூட்டுறவு தினம்
Published on

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சோசலிசவாதியான சார்லஸ் பூரியர், இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஓவன், டாக்டர் வில்லியம் கிங் ஆகியோரின் சிந்தனையில் உதித்த தத்துவமே, கூட்டுறவு. இது 1844-ல் ரொக்டேல் நகர தொழிலாளர் களால் செயல்வடிவம் பெற்றது. கூட்டுறவு என்பது, ஜனநாயக அடிப்படையில் கட்டுப் படுத்தப்படும் சுயேச்சையான தொழில் முயற்சி ஒழுங்கமைப்பாகும். தனியாட் களின் பொதுவான பொருளாதார, சமூக, கலாசார தேவைகளை பெற்றுத் தருவதே இதன் நோக்கமாகும். இணைந்து செயலாற்றுதல், அனைவருக்கும் பொதுவான தன்மை, தனிநபர் சுதந்திரம், சமத்துவம், ஜனநாயகம், சேவை நோக்கம், உயர் ஒழுக்க நிலை, கூட்டுணர்வு, புதிய சமூக ஒழுங்கு போன்றவை, இதன் பொது இயல்புகளாக உள்ளன.

சர்வதேச கூட்டுறவு அமைப்புகள் அனைத்தும், ஏழு வண்ணங்களை உள்ளடக்கிய கொடியின் கீழ் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. 1923-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதலாவது சனிக்கிழமை பன்னாட்டு கூட்டுறவு தினம் என்பதாக உலக நாடுகளால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத் துறையானது, ஒரு நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சியில் முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் 20-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இந்தத் துறையில் ஏற்பட்ட எழுச்சியோடு ஒப்பிடும்போது, இப்போது அதன் நிலை முக்கியத்துவத்தை இழந்ததாகவே இருக்கிறது. தற்போதைய நவீன காலத்தில் உலகமயமாக்கல் என்ற சிந்தனை காரணமாக கூட்டுறவுத் துறையின் வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இருப்பினும் ஒரு நாட்டிற்கு கூட்டுறவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று என்பதையும் மறுப்பதற்கில்லை. இதை தற்போது உலக நாடுகள் அனைத்தும் உணர்ந்தே இருக்கின்றன. அதன் காரணமாக ஆண்டு தோறும் பன்னாட்டு கூட்டுறவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com