

இது குறித்த அறிக்கையில், நடப்பு கல்வியாண்டு (2019-20) முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எனவே புதிய பாடத்திட்டத்தின்படியே வரும் ஏப்ரல் மாதம் தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏற்கெனவே பழைய பாடத் திட்டத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தோல்வியுற்ற பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தில் படித்து எழுதிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.