

சுயமரியாதை என்பது மனிதன் தன்னைப் பற்றிய நேர்மறையான மற்றும் ஆரோக்கியமான உணர்வை வளர்ப்பதை உள்ளடக்கியது. மேலும் தன்னை சமூகத்தில் நிலைப்படுத்துக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சியாகும். இந்த சுயமரியாதையை வளர்ப்பது என்பது படிப்படியான செயல்முறையாகும். சுயமரியாதையை வளர்த்துக் கொள்ள இந்த வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.
மனதில் எழக்கூடிய எண்ணங்களுக்கு கவனம் செலுத்துங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்கள் அல்லது சுய விமர்சனங்களை அடையாளம் காணுங்கள். நேர்மறையான மற்றும் யதார்த்தமான உறுதிமொழிகளுடன் அவற்றை மாற்றுவதன் மூலம் அந்த எதிர்மறை நம்பிக்கைகளுக்கு சவால் விடுங்கள். உங்கள் பலம், சாதனைகள் மற்றும் தனித்துவமான குணங்களில் கவனம் செலுத்துங்கள். முடிவுகளை எடுக்கும்போது உங்கள் உணர்வுகளையும் தேவைகளையும் கருத்தில் கொள்ளுங்கள்.
குறுகிய கால மற்றும் நீண்ட கால இரண்டிலும் உங்களுக்காக அடையக்கூடிய இலக்குகளை அமைத்து செயல்படுங்கள். அந்த இலக்குகளை படிப்படியாக எட்டும்போது உங்கள் முன்னேற்றத்தைக் கொண்டாடுங்கள். இலக்குகளை அடைவது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் சாதனை படைத்ததுபோன்ற உணர்வை வழங்குகிறது.
உங்கள் உடல் நலன் மற்றும் மன நலனை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மகிழ்ச்சி தரும் மற்றும் உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக உணரக்கூடிய செயல்களில் ஈடுபடுங்கள்.
இதில் உடற்பயிற்சி, சத்தான உணவு, போதுமான தூக்கம், அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுதல், ஓய்வெடுக்கும் நுட்பங்களைப் பயிற்சி செய்தல் மற்றும் பொழுதுபோக்குகள் அல்லது பிடித்தமான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை அடங்கும்.
உங்களை மேம்படுத்தி ஊக்குவிக்கும் நபர்களிடம் நட்பு கொள்ளுங்கள். உங்களை நேர்மறையாக வழிநடத்தும் நபர்களுடன் உறவுகளை உருவாக்குங்கள்.
உங்களைப் பற்றி புறம்பேசும் அல்லது மறைமுகமாக உங்களை வீழ்த்த நினைக்கும் நச்சு உறவுகள் அல்லது சூழல்களைத் தவிர்க்க வேண்டும். மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நேர்மறையான தாக்கங்களுடன் உங்களைச் சூழ்ந்துகொள்வது உங்கள் சுயமரியாதையை அதிகரிக்கும்.
தோல்விகளின்போது அதையே நினைத்து வருந்துவதற்கு பதிலாக, அவற்றை வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகளாகக் கருதுங்கள். பின்னடைவுகள் வாழ்க்கையின் இயல்பான பகுதி என்பதை புரிந்து கொள்ளுங்கள். தவறு நடந்ததை பகுப்பாய்வு செய்து, தேவையான மாற்றங்களைச் செய்து, புதிய அறிவு மற்றும் உத்வேகத்துடன் முன்னேற முயற்சி செய்யுங்கள்.
மற்றவர்களிடமிருந்தும் உயர்ந்த பண்பை எதிர்பார்ப்பதுபோல் நீங்களும் அந்த உயர்ந்த நடத்தையுடன் இருங்கள். கருணை, புரிதல் மற்றும் இரக்கத்துடன் உங்களை நடத்துங்கள். சுயவிமர்சனத்தைத் தவிர்க்கவும். ஒவ்வொருவரும் தவறு செய்கிறார்கள் மற்றும் குறைபாடுகள் இருப்பதை ஒப்புக்கொள்வதன் மூலம் சுய இரக்க்ததை பயிற்சி செய்யுங்கள்.
தோல்வி அல்லது துயரத்தின்போது ஒரு நல்ல நண்பரை நடத்துவது போல், உங்களை நீங்களே அன்பாகவும், கனிவாகவும் நடத்துங்கள். இந்த உளவியல் பழக்கமானது, உங்களின் சுய மரியாதையை புரிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லும்.