

அருணாச்சல பிரதேசம், கேரளா மாநில பறவை. மேற்கு தொடர்ச்சி மலை, இமயமலை அடிவார காடுகள், பூட்டான், நேபாளம், தென்கிழக்கு ஆசியா வரை பசுமை மாறா காடுகளில் வாழும். பெரிய, உயரமான, பழைய மரங்கள் தான் இருவாச்சி பறவைக்கு பிடிக்கும்.
இதன் இனப்பெருக்க காலம் ஜனவரி முதல் ஏப்ரல் வரை. இந்த நேரத்தில் ஆணும் பெண்ணும் "கோக்-கோக்" என்று சத்தமாக டூயட் பாடும். ஆண் பறவை பெரிய மரத்தின் பொந்தை தேடும். பெண் பறவை பொந்துக்குள் நுழைந்ததும், அந்த ஓட்டையை சாணம், மண், பழக்கூழ் கொண்டு செய்த பூச்சால் அடைத்து விடும்.
பெண் பறவை உள்ளேயே இருந்து 38-40 நாட்கள் 1-2 முட்டைகளை அடை காக்கும். இந்த நேரத்தில் பெண் முழு இறகையும் உதிர்த்து புது இறகு வளர்க்கும். முழுக்க முழுக்க ஆண் பறவையை நம்பி தான் வாழ்க்கை. ஆண் பறவை தினமும் 13 முறை, 4 மாதம் தொடர்ந்து பழங்களை கொண்டு வந்து அந்த பிளவு வழியாக கொடுக்கும்.
அத்திப்பழம் தான் மிகவும் பிடிக்கும், ஒரு வேளைக்கு 150 அத்திப்பழம் வரை தின்னும்! பெண் மற்றும் குஞ்சுகள் மலத்தை அந்த பிளவு வழியாகவே வெளியே தள்ளும்.
குஞ்சு பாதி வளர்ந்ததும் பெண் சுவரை உடைத்து வெளியே வரும், குஞ்சுகள் மீண்டும் உள்ளே இருந்து சுவரை அடைத்து கொள்ளும். பாம்பு, பருந்து போன்ற எதிரிகளிடம் இருந்து முட்டை, குஞ்சுகளை காக்க தான் இந்த பாதுகாப்பு முறை. இது காட்டின் தோட்டக்காரன், விதைகளை பரப்பி காட்டை வளர்க்கும்.