

சென்னை,
தமிழகத்தில் கடந்த மே மாதம் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதல் செப்டம்பர் 26-ந் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 54 ஆயிரத்து 327 நபர்கள் புதிய ஸ்மார்ட் கார்டு கோரி விண்ணப்பித்துள்ளனர்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின்படி, 6 லட்சத்து 65 ஆயிரத்து 102 புதிய ஸ்மார்ட் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. 63 ஆயிரத்து 601 ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி நடைபெற்று வருகிறது.