இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 10 நாகை மீனவாகள் சென்னை வந்தனா

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 10 நாகை மீனவாகள் சென்னை வந்தனா
Published on

மீனம்பாக்கம்,

நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 10 பேர் கடந்த 7-ந் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 10 மீனவர்களை கைது செய்தனா.

பின்னர், படகுகளுடன் இலங்கை கோர்ட்டில் ஆஜாபடுத்தி சிறையில் அடைத்தனா. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் நாகையை சேர்ந்த 10 மீனவர்களையும் கடந்த 21-ந் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர் மீனவர்கள் 10 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

10 மீனவாகளுக்கும் கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கிய மீனவர்களை பா.ஜ.க. சார்பில் மாநில மீனவரணி தலைவர் நீலாங்கரை முனுசாமி ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவாகளை சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com