பட்டப்பகலில் ஆடு வியாபாரி வீட்டில் 10 பவுன் நகைகள் கொள்ளை

க.பரமத்தி அருகே பட்டப்பகலில் ஆடு வியாபாரி வீட்டில் 10 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் ஆடு வியாபாரி வீட்டில் 10 பவுன் நகைகள் கொள்ளை
Published on

நகை-பணம் கொள்ளை

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள காருடையாம்பாளையம் ஊராட்சி, மாலப்பாளையம் புதூரை சேர்ந்த செல்வராஜ் (வயது 57). இவர் ஆடு வியாபாரி. நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு செல்வராஜ் தனது மனைவி சர்மிளாவுடன் சொந்த வேலை காரணமாக கரூர் சென்றார். பின்னர் மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தார்.

அப்போது வீட்டின் முன்புற இரும்பு கேட்டின் பூட்டு மற்றும் வீட்டு கதவின் பூட்டு ஆகியவை உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவர் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் மதிப்பிலான 2 தங்க நாணயங்கள், ரூ.30 ஆயிரத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து க.பரமத்தி போலீசார் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com