மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 10 டன் போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல்
Published on

தூத்துக்குடி,

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.70 கோடி மதிப்பிலான 10 டன் போதைப்பொருள் தூத்துக்குடி துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து கப்பல் ஒன்றின் மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஒயிட் சிமெண்ட் எனப்படும் மூலப்பொருள் கொண்டு வரப்பட்டது. இதில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட பாப்பி சீட் எனப்படும் போதைப்பொருள் கடத்தி கொண்டு வரப்படுகிறது என்று மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கப்பல் கரைக்கு வந்ததும் அதிகாரிகள் உடனடியாக கப்பலில் சோதனை செய்தனர். அப்போது கப்பலில் ஒயிட் சிமெண்ட் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர் பெட்டியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் 10 டன் எடை கொண்ட பாப்பி சீட் எனப்படும் போதைப்பொருள் இருந்தது. துருக்கி, கிர்கிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகளில் மட்டுமே இந்த பாப்பி சீட் போதைப்பொருளை பயன்படுத்த அனுமதி உள்ளது.

இதையடுத்து சட்டவிரோதமாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ஒயிட் சிமெண்ட் கொண்டு வரப்பட்ட கண்டெய்னர் பெட்டி எந்த முகவரியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது என்று மத்திய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் ரூ.1.70 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com