

சென்னை,
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னை அருகே வடதமிழகம் - தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பகுதியில் அதி கனமழை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, சென்னையில் இருந்து 100 கி.மீ தெலைவிலும், புதுச்சேரியில் இருந்து 120 கி.மீ தெலைவிலும் மையம் கொண்டுள்ளது. தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்கிறது. மணிக்கு 18 கி.மீட்டர் வேகத்தில் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.