சென்னை மீனம்பாக்கம் சித்தா கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்ற 100 பேர் குணமடைந்தனர்

மீனம்பாக்கத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட சித்தா கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்ற 100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை மீனம்பாக்கம் சித்தா கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்ற 100 பேர் குணமடைந்தனர்
Published on

சென்னை,

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசு சார்பில் சித்தா கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு 2 வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில், இதுவரை அங்கு சிகிச்சை பெற்ற 100 கொரோனா நோயாளிகள் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவ்வாறு குணமடைந்தவர்களுக்கு மருத்துவ பெட்டகத்தை சிகிச்சை மைய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சாய் சதீஷ் இன்று வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com