

கோவை
தமிழ்ப்புத்தாண்டு தினமான வருகிற 14-ந்தேதி செவ்வாய்க்கிழமை, விடுமுறை நாள் என்பதால் , கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி,தேனி, நாகர்கோவில் உள்பட பல பகுதிகளுக்கு கோவையில் இருந்து இந்த பஸ்கள் 10-ந்தேதி இரவு முதல் இயக்கப்படுவதாகவும், விடுமுறை முடிந்து வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு வசதியாகவும் பஸ்கள் இயக்கப்பட இருப்பதாகவும் அரசு பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.