புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் கைது

சென்னையில் புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புகையிலை பொருட்கள் விற்றதாக ஒரே நாளில் 101 பேர் கைது
Published on

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் ''புகையிலை பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கை" என்ற பெயரில் அவ்வப்போது சிறப்பு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடைபெற்றது. இதில் பள்ளி-கல்லூரி அருகே குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த 27 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 5 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 350 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் குட்கா புகையிலை பொருட்களை விற்ற 74 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 34 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், 505 சிகரெட் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்துக்காக ஒரே நாளில் 101 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com