கடலூரில், வருகிற 10-ந்தேதி108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு

கடலூரில், 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு வருகிற 10-ந்தேதி நடக்கிறது.
கடலூரில், வருகிற 10-ந்தேதி108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு
Published on

108 அவசர கால ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கடலூர் தேவனாம்பட்டினம் பாக்குமரசாலையில் உள்ள ரோட்டரி ஹாலில் வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி. (பிளஸ்-2-க்கு பிறகு 2 ஆண்டுகள் படிப்பு) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்சி. விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி) மருத்துவ உதவியாளர் பணிக்கு ரூ.15,435 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.

டிரைவர் பணியிடத்துக்கு 24 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரு பாலருக்கும் வாய்ப்பு உண்டு. ஓட்டுனர் உரிமம் பெற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். பேட்ஜ் உரிமம் எடுத்து 2 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 162.5 சென்டி மீட்டர் உயரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். டிரைவர் பணிக்கு ரூ.15, 235 ஊதியம் வழங்கப்படும். அசல் சான்றிதழ் கட்டாயமாக எடுத்து வரவும். முக கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும். மேற்கண்ட தகவலை 108 ஆம்புலன்ஸ் சேவை கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com