108 திருவிளக்கு பூஜை

வேம்படி மகாமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
108 திருவிளக்கு பூஜை
Published on

வலங்கைமான்:

வலங்கைமானில செட்டித்தெருவில் உள்ள வேம்படி மகாமாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையொட்டி 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் வலங்கைமான் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கை ஏற்றி, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். முன்னதாக வேம்படி மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் சய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com