10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: 3 மாணவிகள் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை


10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: 3 மாணவிகள் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று சாதனை
x

சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர்.

சென்னை,

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவிகள் மதிப்பெண்களை குவித்து உள்ளனர். 500 மதிப்பெண்களுக்கு 499 பெற்று மாநில அளவில் சாதனை படைத்து இருக்கிறார்கள். 3 மாணவிகளும் தனியார் பள்ளியில் படித்தவர்கள்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மாணவி சுபஸ்ரீ, உடுமலைப் பேட்டை மாணவி திவ்யா லட்சுமி மற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள புலவடையான் கோகிலாம்பாள் பள்ளி மாணவி சோபியா ஆகிய 3 பேரும் 499 மதிப்பெண் பெற்று உள்ளனர்.

மூவரும் 4 பாடங்களில் 100-க்கு 100 வாங்கி உள்ளனர். ஒரே ஒரு பாடத்தில் மட்டும் 99 மார்க் எடுத்தனர். மாணவி சோபியாவின் தந்தை வெங்கடேசன். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாராட்டினர்.

1 More update

Next Story