தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு முதன்மைச் செயலாளர் சுன்சோங்கம் ஜடக்கிற்கு இயற்கை வளங்கள் துறை ஒதுக்கி கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தலைமைச்செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
*நிதித்துறை செலவின செயலர்- பிரசாந்த் மு வடநெரே
*நிதித்துறை இணைச் செயலர் -ராஜகோபால் சுன்கரா
*நில அளவைத்துறை இயக்குநர் - தீபக் ஜேக்கப்
* போக்குவரத்து, சாலைப் பாதுகாப்பு கமிஷனர்- கஜலட்சுமி
* கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர்- கவிதா ராமு
* குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர்- சமீரன்
* மீன்வளத்துறை இயக்குநர் - முரளீதரன்
* வருவாய் நிர்வாக ஆணையர் - கிரண் குராலா
* கோவை வணிக வரி இணை கமிஷனர் - தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ்
* சென்னை வணிக வரி( அதிக வரி செலுத்துவோர் பிரிவு) இணை கமிஷனர் - நாராயண சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
* போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சுன்சோங்கம் ஐடக் சிருவுக்கு கூடுதலாக இயற்கை வளங்கள் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






