பள்ளியில் துன்புறுத்தப்பட்ட 12 பீகார் சீறுவர்கள் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

காவல்துறையினர் 12 சிறுவர்களுக்கும் பரிசுப்பொருட்கள் கொடுத்து ரெயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளியில் துன்புறுத்தப்பட்ட 12 பீகார் சீறுவர்கள் - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
Published on

சென்னை,

சென்னை மாதவரத்தில் உள்ள பள்ளியில், பீகார் மாநிலத்தை சேர்ந்த 12 சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதாக, குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் உதவியுடன் பள்ளிக்கு சென்ற அதிகாரிகள், அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவர்களை மீட்டு, ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுவர்களை கேபிள் வயர்களால் தாக்கிய 2 பள்ளி நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் 12 சிறுவர்களுக்கும் பரிசுப்பொருட்கள் கொடுத்து ரெயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com