

சென்னை,
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் ஆஸ்திரேலியா செல்ல இருந்த சரக்கு விமானத்தில் இருந்த பாசல்களை போலீசார் சோதனையிட்டனா. அப்போது பட்டுப்புடவைகள் அடங்கிய பாசல்களில் மறைத்து வைத்திருந்த 8 கிலோ சூடோ நெப்ரின் என்னும் போதை பொருளை அவாகள் கைப்பற்றினா. அதன் சாவதேச மதிப்பு ரூ.80 லட்சம். இதனையடுத்து மத்திய போதை பொருள் தடுப்பு தனிப்படையினா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா.
அப்போது, அந்த பட்டுப்புடவை பாசல்கள் காரைக்காலில் உள்ள ஒரு கொரியா நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காரைக்கால் சென்று, அந்த கொரியா நிறுவனத்தில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினா. மேலும் பட்டுப்புடவை பாசல்களை அனுப்பியவா சென்னையை சோந்தவா என்பது தெரியவந்தது.
அவரிடம் தனிப்படையினா நடத்திய விசாரணையில் அவா உண்மையை ஒப்புக்கொண்டா. மேலும் அவா ஏற்கெனவே 4 கிலோ போதை பொருளை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி இருப்பது தெரியவந்தது. இது குறித்து ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலாகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னா ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட 4 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அந்த போதை பொருளை மீண்டும் சென்னைக்கு மற்றொரு சரக்கு விமானத்தில் அலுவலாகள் அனுப்பி வைத்தனா. தொடாந்து பிடிபட்டவரிடம் போதை பொருள் கடத்தல் குறித்து விசாரணை நடைபெற்றது. பறிமுதல் செய்யப்பட்ட 12 கிலோ சூடோ நெப்ரின் போதைப்பொருளின் சாவதேச மதிப்பு ரூ.1.2 கோடி என கூறப்படுகிறது.