தமிழகத்தில் 1,343 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் 1,343 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 1,343 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Published on

சென்னை,

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் விபத்து அதிகமாக நடக்கும் 500 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களுக்கு அருகில் இருக்கும் 679 மருத்துவமனைகள் (அரசு மருத்துவமனைகள் 232, தனியார் மருத்துவமனைகள் 447) மூலம் இந்ததிட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விபத்து நேர்ந்தவுடன் உடனடியாக 48 மணிநேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு அரசு ரூ.1 லட்சம் வரை காப்பீடு திட்டத்தின் மூலம் செலவிடுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 1,31,164 பேர் பயனடைந்துள்ளனர், ரூ.116,79,99,373 செலவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருக்கின்ற மருத்துவ கட்டமைப்பை மத்திய அரசு தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருக்கிறது. 2008-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 108 என்னும் அவசர வாகன உதவியை தொடங்கி வைத்தார். அதில் இன்று வரை 1,343 வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில், 300 வாகனங்கள் உயிர்காக்கும் அதிநவீன கருவிகள் பொறுத்தப்பட்டு முழுமையான உயிர் காக்கும் வாகனங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com