135-வது பிறந்தநாள்: பாரதிதாசன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி இன்று முதல் மே 5-ந்தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படுகிறது.
சென்னை,
பாவேந்தர் பாரதிதாசனை போற்றும் வகையில், அவர் பிறந்த நாளான ஏப்ரல் 29-ந்தேதி (இன்று) முதல் மே 5-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் "தமிழ் வாரம்" கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் மே 5-ந்தேதி வரை தமிழ் வாரம் கொண்டாடப்படுகிறது.
மேலும், பாரதிதாசனின் 135-வது பிறந்தநாளான இன்று சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவருடைய உருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பாரதிதாசன் புகைப்படத்திற்கு முதல்-அமைச்சர் மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






