செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு

செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.
செப்டம்பர் 9 முதல் அக்டோபர் 31 வரை ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு
Published on

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11 ஆம் தேதி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் அக்டோபர் 30 ஆம் தேதிபசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை என மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.

வெளிமாவட்டத்தை சேர்ந்த வாகனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com