திமுக ஆட்சியில் 15 மாநகராட்சிகள்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் புதிதாக 4 மாநகராட்சிகள் உதயமாகி உள்ளன.
திமுக ஆட்சியில் 15 மாநகராட்சிகள்: மு.க.ஸ்டாலின் பெருமிதம்
Published on

சென்னை,

தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி என 4 மாநகராட்சிகள் உதயமாகி உள்ளன. புதிய மாநகராட்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த விழாவில் தொடங்கி வைத்தார். 21 மாநகராட்சிகள் இருந்த நிலையில் தற்போது மேலும் 4 புதிய மாநகராட்சிகள் உதயமானதால், அதன் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

"நேற்று நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தியுள்ளோம். தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதைப் பெருமையோடு சொல்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com