கல்வி சுற்றுலாவுக்காக பிளஸ்-1 மாணவ-மாணவிகள் 157 பேர் ஊட்டி சென்றனர்

பிளஸ்-1 மாணவ-மாணவிகள் 157 பேர் கல்வி சுற்றுலாவுக்கு ஊட்டி சென்றனர்.
கல்வி சுற்றுலாவுக்காக பிளஸ்-1 மாணவ-மாணவிகள் 157 பேர் ஊட்டி சென்றனர்
Published on

சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி "கோடை கொண்டாட்டமானது" கோடை விடுமுறையில் பிளஸ்-1 வகுப்பு முடித்து பிளஸ்-2 வகுப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி மாநில அளவில் முதன் முறையாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான கல்வி சுற்றுலா மற்றும் சிறப்பு முகாம் ஊட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 7-ந்தேதி வரை 5 நாட்களுக்கு நடத்த தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக மாநில அளவில் 20 மாவட்டங்களில் இருந்து 2021-22-ம் கல்வியாண்டிற்கு கல்வியில் சிறப்பாக திகழ்ந்த 1,585 மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கல்வி சுற்றுலா செல்வதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் 29 மாணவர்களும், 47 மாணவிகளும் என மொத்தம் 76 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 40 மாணவர்கள், 41 மாணவிகள் என மொத்தம் 81 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் கல்வி சுற்றுலாவில் கலந்து கொள்வதற்காக தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சொகுசு பஸ்சில் புறப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி சுற்றுலாவுக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து புறப்பட்டு சென்றனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து கல்வி சுற்றுலா சென்ற பஸ்சினை கலெக்டர் ரமணசரஸ்வதி கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். மேலும் அவர் மாணவ-மாணவிகளுக்கு கேன்வாஸ் ஷூவை வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com