ஆடி அமாவாசை: குமரி மாவட்டத்தில் வருகிற 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஶ்ரீதர் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கன்னியாகுமரி,

ஆடி அமாவாசை அன்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களின் நினைவாக பலி தர்ப்பணம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதம் பல ஆண்டுகளுக்கு பிறகு 2 அமாவாசையாக வருகிறது. அதாவது கடந்த ஜூலை 17-ந்தேதி அமாவாசையுடன் ஆடி மாதம் பிறந்தது. அதே போல் வருகிற ஆடி 31-ந் தேதி (ஆகஸ்ட் 16) மற்றொரு அமாவாசையும் வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 16-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ஶ்ரீதர் அறிவித்துள்ளார். ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சி நடத்தும் வாவுபலி கொண்டாட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதை ஈடுசெய்யும் விதமாக செப்டம்பர் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com