

சென்னை,
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடைகால விடுமுறை விடப்பட்டுள்ளது. இதுபோன்ற விடுமுறை காலங்களில் சொந்த ஊர்களுக்கும், குளிர் பிரதேசங்கள், புனித தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பம், குடும்பமாக மக்கள் பயணிப்பார்கள்.
எனவே ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை 18 ஆயிரத்து 262 கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதில் இதுவரை 11 ஆயிரத்து 878 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் நலனுக்காக மேலும் எஞ்சிய ரெயில்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.