மினிபஸ் கண்ணாடியை உடைத்த 2 போ கைது

திண்டிவனத்தில் மினிபஸ் கண்ணாடியை உடைத்த 2 போ கைது செய்யப்பட்டனர்.
மினிபஸ் கண்ணாடியை உடைத்த 2 போ கைது
Published on

திண்டிவனம், 

திண்டிவனம் அப்பாசாமி நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 36). தனியார் பஸ் கம்பெனி மேலாளர். சம்பவத்தன்று இவரது அலுவலகத்திற்கு திண்டிவனம் கிடங்கல் - 2 பகுதியை சேர்ந்த ராஜேஷ் (22), அண்ணா தெருவை சேர்ந்த அப்பு என்கிற ஆகாஷ் (21) ஆகிய 2 பேரும் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த தர்மராஜிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டதாக தெரிகிறது. அதற்கு அவர், பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தனியார் மினி பஸ்சில் பயணிகளை ஏற்றும் பணியில் தர்மராஜ் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராஜேஷ், அப்பு ஆகியோர் தர்மராஜிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி மிரட்டல் விடுத்தனர். மேலும் மினி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலிசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com