பாலியல் வன்கொடுமை, போக்சோ வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.
பாலியல் வன்கொடுமை, போக்சோ வழக்கில் 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 26) என்பவர் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.

இதேபோல் தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிமுத்து(45) என்பவர் அனைத்து மகளிர் காவல் நிலைய மற்றொரு போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவர் ஆவார்.

மேற்சொன்ன 2 பேர் மீதும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சொர்ணராணி, மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அவரது வேண்டுகோளின் பேரில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில், மேற்சொன்ன 2 பேரையும் நேற்று முன்தினம் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com