நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x

நெல்லை மாநகரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 2 பேர் முறையே பாளையங்கோட்டை மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூரைச் சோந்த முத்துகுமார் மகன் ஹரிஹரன் (வயது 25) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் அருண்குமார்(35) ஆகிய 2 பேரும் நெல்லை மாநகர பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (சந்திப்பு சரகம்) சரவணன், தச்சநல்லூர் (சட்டம், ஒழுங்கு) போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி முறையே நேற்றும் (8.11.2025), இன்றும் (9.11.2025) குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story