சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் 2 ஆண் சடலங்கள் மீட்பு

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் 2 ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. #IIT #MadrasIIT
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் 2 ஆண் சடலங்கள் மீட்பு
Published on

சென்னை,

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் 2 ஆண் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் 7 பேர் குளிக்கச்சென்றதாகவும் அதில், 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்து விட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த 2 பேரும் கானகம் பகுதியைச்சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனுமதியின்றி ஐஐடி வளாகத்தின் பின்புற சுவர் வழியாக ஏறி குதித்து ஏரியில் குளிக்கச்சென்ற போது இந்த விபரீதம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com