தனித்தனி விபத்தில் 2 பேர் பலி

விழுப்புரம் அருகே தனித்தனி விபத்தில் 2 பேர் பலியாகினர்.
தனித்தனி விபத்தில் 2 பேர் பலி
Published on

விழுப்புரம், 

விழுப்புரம் பானாம்பட்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 60). இவர் சிறுவந்தாட்டில் உள்ள ஒரு விவசாய நிலம் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த கண்ணனை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே கண்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதேபோல் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.மாத்தூர் நகரி கிராமத்தை சேர்ந்தவர் அருள் (47). இவர் அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தஜோதி (30) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் பி.எஸ். பாளையத்திலிருந்து வி.மாத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். குமளம் அரிசி ஆலை அருகே வரும்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், அருளின் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருள், ஆனந்தஜோதி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள் இறந்தார். ஆனந்தஜோதி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்துகள் குறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com