தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் திரிந்த 2 பேர் கைது

தூத்துக்குடி கேவிகே நகரில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி, மத்திய பாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துவீரப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கேவிகே நகரில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் வாள் மற்றும் அரிவாள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவர்கள் தூத்துக்குடி, பிரையன்ட்நகர் 10வது தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (வயது 25), தேவர்காலனி முதல் தெருவை சேர்ந்த பாண்டியராஜ் மகன் சூரியபிரகாஷ்(20) எனத் தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story






