2 பேர் தற்கொலை

வெவ்வேறு இடங்களில் பஸ் கண்டக்டர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்
2 பேர் தற்கொலை
Published on

நெல்லை அருகே கீழநத்தம் வடக்கூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் மகன் ராஜ்குமார் (வயது 37). அரசு பஸ் கண்டக்டர். இவர் மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தாராம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் உயிர் இழந்தார். இதுகுறித்து நெல்லை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த நாராயணன் (73) என்பவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com