என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

சமூக வலைத்தளத்தில் இளம்பெண்ணை ஆபாசமாக சித்தரித்த என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது
Published on

நத்தம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் மாதவன் (வயது 26). என்ஜினீயரான இவர், அதேபகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்தார். தனது காதலை அந்த பெண்ணிடம் அவர் வெளிப்படுத்தினார். ஆனால் அந்த பெண் அவரது காதலை ஏற்கவில்லை. இருப்பினும் தன்னை காதலிக்குமாறு, அந்த பெண்ணை மாதவன் தொடர்ந்து கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அந்த பெண்ணை அவமானப்படுத்த மாதவன் முடிவு செய்தார். இதற்காக, அதே ஊரை சோந்த தனது நண்பரும் பட்டதாரியுமான நவீன் (23) என்பவரின் உதவியை நாடினார். அதன்படி இவர்கள் 2 பேரும் சேர்ந்து அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அந்த பெண்ணின் பெற்றோர், நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மாதவன், நவீன் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com