நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது

பட்டிவீரன்பட்டி அருகே நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாட்டு துப்பாக்கி வைத்திருந்த 2 பேர் கைது
Published on

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமத்தை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இவற்றை சிலர் வேட்டையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதியில் பட்டிவீரன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் நாட்டுத்துப்பாக்கி ஒன்று இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். திடீரென்று அவர்கள் தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சித்தரேவு 7-வது வார்டை சேர்ந்த சோலைராஜ் (வயது 30), 1-வது வார்டை சேர்ந்த ராமு (30) என்றும், வனப்பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபடுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com