மது விற்ற 2 பேர் கைது

நெல்லையில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மது விற்ற 2 பேர் கைது
Published on

நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை பகுதியில் நேற்று சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லையா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்ற மாரிமுத்து (வயது 51) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்து 37 மது பாட்டில்கள், ரூ.110-ஐ பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தச்சநல்லூர் போலீசார் நயினார்குளம் மார்க்கெட் சாலையில் ரோந்து சென்றபோது அந்த பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுப்பேட்டையைச் சேர்ந்த கண்ணன் (48) என்பவரை கைது செய்து, 48 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com