கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்

அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்
கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்
Published on

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் ஜான்சி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 44). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜனவரி 25-ந்தேதி இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், குடும்பத்தினரை கட்டி போட்டு 50 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த கும்பல் 2 மோட்டார் சைக்கிள்களில் தூத்துக்குடி நோக்கி தப்பி சென்றனர். புதுக்கோட்டை பகுதியில் சென்ற போது இவர்களது மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று உரசிக்கொண்டதில் காயம் ஏற்பட்டு, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற போது போலீசாரிடம் சிக்கிக்கொண்டனர்.

இது தொடர்பாக போலீசார் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். மேலும் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த சாம் என்ற சம்சுதீன் உள்ளிட்டோர் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று 2 பேரை பெருமாள்புரம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com