வேனில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு வேனில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேனில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

நாகர்கோவில்:

கேரளாவுக்கு வேனில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வாகன சோதனை

குமரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் சுரேஷ்குமார் தலைமையில் துணை தாசில்தார் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் அனில் குமார் ஆகியோர் நேற்று நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு வேனை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் டிரைவர் வனை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் அந்த வேனை விரட்டிச் சென்றனர். அப்போது சிறிது தூரம் சென்றதும் வேனை நிறுத்திவிட்டு டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

ரேஷன் அரிசி பறிமுதல்

அதைதொடர்ந்து அதிகாரிகள் வனில் சோதனை செய்தனர். அதில் சிறு, சிறு மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com