ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை


ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி இளம்பெண்ணுக்கு தொல்லை கொடுத்த வாலிபருக்கு 2 ஆண்டுகள் சிறை
x

இளம்பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி வாலிபர் தொல்லை கொடுத்து மிரட்டியுள்ளார்.

சென்னை

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் முகமது ஆசிப் (25 வயது). இவருக்கு ஆன்லைன் செயலி மூலம் சென்னையைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் அறிமுகம் ஆனார். அப்போது நட்பின்பேரில் இளம்பெண் தனிப்பட்ட பதிவுகளை பகிர்ந்துள்ளார். இதற்கிடையில் இளம்பெண்ணிடம் ஆபாச வீடியோக்களை அனுப்பக்கோரி தொல்லை கொடுத்து மிரட்டி வந்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கடந்த 2024-ம் ஆண்டு அளித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆசிப்பை கைது செய்தனர்.

இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை முடித்து சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சாட்சிகள் மற்றும் ஆதாரங்களை முறையாக ஆஜர் செய்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து மாஜிஸ்திரேட்டு ராம்குமார் தீர்ப்பு வழங்கினார்.

அதில் முகமது ஆசிப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 டி-யின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும், பிரிவு 354 டி-யின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும், இந்த சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

1 More update

Next Story