கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

தேசூர் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
Published on

சேத்துப்பட்டு

தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாய்ராம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஈசாகொளத்தூர் பஸ் நிறுத்தத்தில் தேசூரை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் துரைமுருகன் (வயது 23), ரமேஷ் என்பவரின் மகன் நந்தகுமார் (26) ஆகிய இருவரும் போலீசை பார்த்ததும் ஓடினர்.

இதையடுத்து போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com