திருவாரூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலம் வந்த 2 ஆயிரம் டன் நெல்

திருவாரூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலம் வந்த 2 ஆயிரம் டன் நெல்
திருவாரூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயில் மூலம் வந்த 2 ஆயிரம் டன் நெல்
Published on

ஈரோடு மாவட்ட பொது வினியோக திட்டத்துக்காக பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து நெல், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் 1,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரெயில் மூலம் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த ரெயில் நேற்று காலை ஈரோடு ரெயில்வே பணிமனைக்கு வந்தடைந்தது. பின்னர் நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறங்கி, லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நெல் மூட்டைகள் நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு, மாவட்டத்தில் உள்ள பொதுவினியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பப்பட்டு பின்னர் அங்கிருந்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com