நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21 பேர் தேர்வு

நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21 பேர் தேர்வு
நாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 21 பேர் தேர்வு
Published on

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. இதில் 13 தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த முகாமில் 88 வேலை தேடுபவர்கள் கலந்து கொண்டு நேர்முகத் தேர்வில் பங்கேற்றனர். அதில் 21 பேர் பல்வேறு தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா மாயவன் வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com