வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெ.வா. மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெ.வா. மின் உற்பத்தி பாதிப்பு
Published on

சென்னை,

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் தலா 3 அலகுகளில் 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட் 2 அலகுகளில் 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 1-வது நிலையின் 1-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com