வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

வடசென்னை அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
வடசென்னை அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
Published on

வடசென்னை அனல்மின் நிலைய முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள அலகுகள் முழுவதிலும் 5 வருடத்துக்கு ஒரு முறை பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் முதல் யூனிட் 3-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு 45 நாட்களுக்கு பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இவ்வாறு அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com