சேலம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு

சேலம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது.
சேலம் மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு
Published on

சேலம்,

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று புதிதாக 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் 13 பேர், கெங்கவல்லியில் 4 பேர், ஆத்தூரில் 3 பேர், சேலம் ஒன்றியம் மற்றும் நங்கவள்ளியில் தலா ஒருவரும் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com