

சென்னை,
பிப்ரவரி 27-ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பணிநாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக சட்டசபையில் 27-ம் தேதி (சனிக்கிழமை) இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், சட்ட மசோதாக்கள் அறிமுகம் செய்து நிறைவேற்றுதல் போன்ற அலுவல்கள் நடைபெற உள்ளன. அன்று சட்டசபையின் கூட்டத் தொடர் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்ளுக்கும் 27-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.