இளைஞர்களுக்கு 2-வது நாளாக உடற்தகுதி தேர்வு

ராணுவத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு 2-வது நாளாக உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
இளைஞர்களுக்கு 2-வது நாளாக உடற்தகுதி தேர்வு
Published on

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் மூலம் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்த பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 16 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களுக்கான ஏற்கனவே எழுத்து தேர்வு நடந்தது. முதற்கட்ட எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்து 600 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் பெரம்பலூரில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 726 பேர் பங்கேற்றனர். 2-வது நாளான நேற்று 890 இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 785 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு 1,600 மீட்டர் ஓட்டம் உள்ளிட்டவைகளில் உடற்தகுதி தேர்வு நடந்தது. ஓட்டத்தில் 270 பேர் தேர்ச்சி பெற்றனர். அதனை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தது. 3-வது நாளான இன்று (திங்கட்கிழமை) இளைஞர்களுக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 5-ந்தேதியுடன் இந்த பணிகள் நிறைவடைகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com