விருதுநகர்: ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள்...!

விருதுநகர் அருகே ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள் பிறந்துள்ளது.
விருதுநகர்: ஒரே பிரசவத்தில் பெண்ணுக்கு 3 குழந்தைகள்...!
Published on

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மகபேறு மருத்துமனையில் இ.எஸ்.ஐ காலனி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முத்துக்குமார் மனைவி வீரலட்சுமியை பிரசவத்திற்காக அனுமதித்தனர்.

தற்போது வீரலட்சுமிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்து உள்ளது. தாய் மற்றும் 3 குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில்,

வீரலட்சுமி என்ற பெண்ணுக்கு பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்து உள்ளது. இதில் 2 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை என 3 குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். குழந்தைகள் எடை குறைவாக காணப்பட்டது. மேலும் ஒரு குழந்தைக்கு மூச்சு திணறல் இருந்து வந்த நிலையில் சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தையும் நலமாக உள்ளது. இவ்வாது அவர்கள் தெரிவித்தனர்.

இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com