கொரோனா நோயாளிகள் 3 பேர் திடீர் உயிரிழப்பு: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழவில்லை என சுகாதாரத்துறை விளக்கம்

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில்கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்தது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழவில்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா நோயாளிகள் 3 பேர் திடீர் உயிரிழப்பு: ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழவில்லை என சுகாதாரத்துறை விளக்கம்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் திடீர் உயிரிழந்துள்ளனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகின. அதனைதொடர்ந்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் 3 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தாக மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 2 மணி நேரமாக ஆக்ஸிஜன் வரவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழந்தது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு நிகழவில்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com