விழுப்புரம் அருகே கார் மோதி தீப்பிடித்து 3 பேர் பலி

கார் தீப்பற்றி 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே சுற்றுலா சென்ற கார் , சாலையின் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் உடனே தீப்பிடித்து எரிந்தது. அப்போது, காரில் பயணித்தவர்கள் தூக்கத்தில் இருந்ததால் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காரில் பயணித்த சம்சுதின், கொளத்தூரைச் சேர்ந்த ரிஷி, ஆவடி மோகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த அப்துல் அஜீஸ், தீபக் ஆகிய இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. டிரைவர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story






