

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரத்தில் மதுராந்தகம் புறவழிச்சாலையில் சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். அவர்கள் சரவணன், மூர்த்தி மற்றும் சின்ராஜ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.